ஏப்ரல் 2 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழ்நாடு

இரண்டாம் உலகப்போரின் போது திரிகோணமலை கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு: 74 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

  • இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் போர் விமானகுண்டு வீச்சால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து பயணிகள் கப்பல் 74 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையின் திரிகோணமலை கடல்ப குதியில் மீட்கப்பட்டுள்ளது.
  • இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகம் இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனால் இந்த துறைமுகத்தைகைப்பற்ற பல யுத்தங்கள் நடந்துள்ளன. சோழர்கள், போர்த்துகீசியர், நெதர்லாந்து, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலும் திரிகோணமலை துறைமுகம் இருந்துள்ளது.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மோடிக்கு கிரண்பேடி கடிதம்

  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமருக்கு ரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசுக்கு அனுமதி தராதது தொடர்பாக வாட்ஸ் அப்பில் விளக்கியுள்ளார்.

இந்தியாவுடன் தென்கொரிய கூட்டுப்பயிற்சி: கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை

  • இந்தியா – தென் கொரியா கட லோரக் காவல்படையின் கூட்டுப் பயிற்சி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, தென் கொரிய கடலோரக் காவல் படைக் கப்பல் சென்னை வருகிறது.இந்தியா – தென் கொரியா நாடுகள் இடையே பொருளாதாரம், ராணுவ உறவுகள் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே கடலோரக் காவல் படையின் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி வரும் 5-ம் தேதி சென்னை கடல் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது.

தெலங்கானா

தெலங்கானாவில் புதியகட்சி உதயமாகிறது: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • தெலங்கானாவில், தெலங்கானா போராட்ட சமிதியின் தலைவர் கோதண்டராம் புதிய கட்சி தொடங்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட உள்ளார்

இந்தியா

ஊழல் அதிகாரிகளை கண்டு பிடிக்க ஆதார்அட்டை, பான் எண்உ தவும்: ஊழல் கண்காணிப்பு ஆணையர் தகவல்

  • வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கும் ஊழல்அதிகாரிகளை கண்டு பிடிக்க ஆதார் அட்டை உதவும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பு கிடையாது மத்தியஅரசுஅறிவிப்பு

  • எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலைமாதம் இருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன்மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. அதன்பின் நாள்தோறும் சிலகாசுகள் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அதுமாதம் முழுவதும் மொத்தமாக பார்க்கும்போது, விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது. இப்போது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது.

பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

  • குடியரசுத் தலைவர் மாளிகையில் 02 ஏப்ரல் 2018 நடைபெற்ற சிவில் விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், ஐந்து பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும், 38 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் வழங்கினார்.

          விருது பெற்றோர் விவரம் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

விஞ்ஞானசெய்திகள்

சீனாவின்டியான்காங்-1’ விண்வெளி நிலையம் பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது

  • 2011-ம் ஆண்டு சீனா அனுப்பிய ‘சொர்க்கத்தின்அரண்மனை’ என்று அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம், இன்று பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது என்று சீனா விண்வெ ளிமை யம்தெரிவித்துள்ளது.
  • பூமியின் நீள்சுற்று வட்டப்பாதைக்குள் மீண்டும் இந்த விண்வெளிநிலையம் நுழைய முயன்றபோது, இந்திய நேரப்படி காலை45 மணிக்கு பசிபிக்கடலில் விழுந்து. வானில் இருந்து கீழேவிழும் போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன.
  • 2023-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளிநிலையம் அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011-ம் ஆண்டு சீனா டியான்காங்-1 என்ற விண்வெளி மையத்தின் மாதிரியை அனுப்பியது.

செவ்வாய்கிரகத்தில் இறங்க சூப்பர்சோனிக் பாராசூட்டை வெற்றிகரமுடன் சோதனை செய்த நாசா

  • செவ்வாய்கிரகத்தில் இறங்குவதற்காக சூப்பர்சோனிக் பாராசூட்டை அமெரிக்கா வின்விண்வெளி ஆய்வுமையம் வெற்றிகரமுடன் விண்ணில்அனுப்பி சோதனை செய்துள்ளது.

வெள்ளிகிரக ஆசிட் மேகங்களிடையே வாழும் வேற்று கிரகவாசிகள் நாசா தகவல்

  • ஏலியன்கள் வெள்ளிகிரகத்தின் அமில மேகங்களுக்கு நடுவே வாழக்கூடும் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.

அதிநவீன தடுப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து ரஷியா

  • எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

உலகம்

அமெரிக்காவின் எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைதொடங்கியது: கடும் விதிமுறைகள் அமல்

  • அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோர்களுக்கான எச்-1 பி விசா வழங்கும் நடை முறை இன்று தொடங்கியது.விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை மிகக்கடுமையாக்க அதிபர் டெனால்ட்டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், சிறு குறைகள் இருந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
  • அமெரிக்காவில் குடியேறாமல், அங்கு தங்கி பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுவோர், 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி அங்கு பணியாற்றலாம்.

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்; கேப்டவுனின் மாற்றங்கள்

  • ‘டேஜீரோ’ நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு உலகில் முதல்முறையாக தண்ணீரைப் பாதுகாக்ககாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கோஸ்டாரிகா அதிபராக கார்லோஸ் ஆல்வாரேடோ தேர்வு

  • கோஸ்டாரிகா நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது.   இந்த தேர்தலில் ஆளும் சிட்டிசன்ஸ் ஆக்சன் கட்சி மற்றும் நேசனல் ரெஸ்டோ ரேசன் கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.இதில் ஆளுங்கட்சி சார்பில் கார்லோஸ்ஆல்வாரேடோ (வயது 39) போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து பேப்ரிசியோ ஆல்வாரேடோ (வயது 43) போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகளை பெற்று கார்லோஸ் வெற்றிபெற்றார்.

ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்புதிய கின்னஸ் சாதனை

  • இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ்ரக ரோபோட்டுகள் நடமாடின. இது புதிய உலகசாதனையாக பதிவு செய்யப்பட்டது.

வணிகம்

மாநிலங்களுக்கு இடையே பொருள் பரிமாற்றத்துக்கான இவேபில் முறை அமலுக்குவந்தது

  • மாநிலங்களுக்கு இடையேயான பொருள் பரிமாற்றத்துக்கு இணைய வழியில்ர சீதுகளை உருவாக்கும் இ-வேபில் முறை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. ரூ.50,000-க்கும் அதிகமான விலையுள்ள பொருட்களை ஒருமாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச்செல்லும் போது வர்த்தகர்களும், பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் இந்த இ-வே பில்லைஉ ருவாக்க வேண்டும். வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவைவரி அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் பெரும்பாலும் ஒப்பந்தங்களை வர்த்தகர்கள் பெற்றிருப்பதால் முதல்நாளான நேற்று இ-வேபில்கள் அதிகஅளவில் உருவாக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

விளையாட்டு

2011  உலகக்கப்பை வென்ற இதேநாளில் தோனிக்கு பத்மபூஷண் விருது: ரசிகர்கள்நெகிழ்ச்சி

  • 2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற நாளில் மகேந்திர சிங் தோனிக்கு இன்று பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளனர்.இது தற்செயலா அல்லது திட்டமிட்டு அவ்வாறு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆம். இன்று ஏப்ரல் 2-ம் தேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இதே நாளில் தோனி, நுவன் குலசேகராவை சிக்ஸ் அடித்து கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்தார்.

டிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென்ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலயஇலக்கு

  • ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட்போட்டியின் 4-ம் நாளில் தென்ஆப்பிரிக்க அணி தன் 2வதுஇன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம்ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் செஸ்ம்ருதுல் தெஹன்கர் தங்கம் வென்றார்

  • தாய்லாந்தில் நடைபெற்றுவரும் இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் செஸ்ஸில் ம்ருதுல் தெஹன்கர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!