Daily Current Affairs February 16, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 13, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16 ஜனவரி 2021

தேசிய நிகழ்வுகள்

உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமை தாங்கினார்!!

  • டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானவையாக ஆக்குதல் ஆகியவை குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமை வகித்தார்.
  • விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலைதொடர்பு சந்தாதாரர்களை துன்புறுத்தும் தொலைத்தொடர்பு சந்தையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
  • இதற்காக டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவு என்னும் மைய முகமை ஏற்படுத்தப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது!!

  • பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
  • ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளில்,  பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
  • மேலும், இந்த ஒப்பந்த முடிவில் கோவிட் 19 பற்றி பொது சுகாதார ஆராய்ச்சி திட்டத்தை தொடங்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் குடியரசு தின விழாவின் சிறந்த அணிவகுப்பிற்கான விருதினை வழங்கினார்!!

  • மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பாக அணிவகுத்த படைக்கு விருதினை வழங்கினார்.
  • ஆயுதப்படைகள் பிரிவில் சிறந்த அணிவகுப்பு செய்த அணியாக ஜாட் ரெஜிமென்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மத்திய ஆயுதப்படைக்கான விருதினை டெல்லி காவல்துறை பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி காவல்துறை விருதினை பெற்றுள்ளது.

NTLF மாநாட்டில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி பிரதமர் உரை நிகழ்த்தவுள்ளார்!!

  • NTLF மாநாட்டின் 29 ஆம் ஆண்டு விழா வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.
  • NTLF என்பது தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தின் முதன்மை நிகழ்வாக கருதப்படுகிறது. இதில் 30 நாடுகளுக்கும் மேற்பட்ட 1400 பெற கலந்து கொள்ள இருக்கின்றனர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் மென்பொருள் சம்பந்தமான 30 தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைப் பிரிவுடன் அசாம் மற்றும் அருணாச்சல் படைப்பிரிவுகள் இணைப்பு!!

  • இந்திய விமானப்படையின் 106-வது படைப்பிரிவுடன், இந்திய ராணுவத்தின் அசாம் மற்றும் அருணாச்சல் படைப்பிரிவுகளை இணைக்கும் நிகழ்ச்சி அசாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூரில் நடைப்பெற்றது.
  • படைப்பிரிவுகளின் இணைப்பு சாசனத்தில் மேஜர்  ஜெனரல் பி.எஸ். பேல், விமானப்படையின் 106 வது படைப்பிரிவு தலைமை அதிகாரி குரூப் கேப்டன் வரூண் ஸ்லேரியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  • இந்த இணைப்பு  ராணுவ படைகளின் கூட்டு நெறிமுறைகளில் பரஸ்பர புரிதலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

மாநில நிகழ்வுகள்

இந்தியாவின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகம் கேரளாவில் துவக்கம்!!

  • பிரதமர் திரு.நரேந்திரமோடி கேரளாவின் கொச்சியில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • இத்துடன் நாட்டின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகத்தினையும் துவக்கி வைத்தார். இதனை திறந்து வைக்கும் போது கொச்சின் துறைமுகத்தில் சாகரிகா மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் கடல் பொறியியல் பயிற்சி நிறுவனத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கேரளா பற்றி

தலைநகரம் – திருவனந்தபுரம்

முதல்வர் – பினராயி விஜயன்

ஆளுநர் – ஆரிப் முகமத் கான்

மஹாராஜ் சுஹெல்தேவ் நினைவிடம் மற்றும் சிட்டாரா ஏரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!!

  • பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிட்டாரா ஏரி மற்றும் சுஹெல்தேவ் நினைவிடம் ஆகியவற்றின் அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
  • மகாராஜா சுஹெல்தேவின் பிறந்த நாளை ஒட்டி இந்த விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார்.

உத்தரபிரதேச மாநிலம் பற்றி

முதல்வர் – யோகி ஆதித்யநாத்

ஆளுநர் – அனந்திபென் படேல்

தலைநகரம் – லக்னோ

மிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர்!!

  • நரேந்திர மோடி பிப்ரவரி 17 ஆம் தேதி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, முக்கியமான சில திட்டங்களை துவங்கி அதனை நாட்டிற்கு அர்பணிக்கவுள்ளார்.
  • ராமநாதபுரம் – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலியில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு (பெட்ரோலிய எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல்) ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.
  • சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மணலி வளாகத்தில் கேசோலின் சல்பர் நீக்க வளாகம் ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஆண்டுக்கு 9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

ஓய்வுபெற்ற நீதிபதி எம் ராமா ஜோய்ஸ் மறைவு!!

  • ஓய்வுபெற்ற நீதிபதி எம் ராமா ஜோய்ஸ் காலமாகியுள்ளார். வயது மூப்பின் காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
  • இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பு சட்டம் சம்பந்தமாக சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

முக்கிய நாட்கள்

டெல்லி காவல்துறையின் 74 வது அடித்தள நாள்!!

டெல்லி காவல்துறை கடந்த 1946 ஆம் ஆண்டு இந்திய அரசால் துவங்கப்பட்டது. கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதியான இன்று டெல்லி காவல்துறையின் முதல் IGP நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Download CA Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!