தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவிகிதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசை போல தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார். அதன்படி, அகவிலைப்படி உயர்வு நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு, 2016 ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் கூடுதலாக ரூ.9,544.50 கோடி செலவாகும். இதனால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை போல, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது. இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஜனவரி 1 முதல் 31% அகவிலைப்படியை 34% ஆக, அதாவது 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயா்வை அறிவிக்கிறதோ, அதே தேதியில், அதே விகிதத்தில், தமிழக அரசு ஊழியா்களுக்கும் மாநில அரசு வழங்கும் என்பதே இது வரையில் உள்ள நிலைப்பாடு ஆகும். எனவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 34 சதவீதம் அகவிலைப்படியை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!