தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதிய ரேஷன் அட்டை:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் இல்லாமல் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலின் போது புதிதாக ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அனைத்து மாவட்டங்களிலும் புதிய ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்களின் சிரமத்தை குறைக்க குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். இந்த முகாமில் கணவரால் கைவிடப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளிகள், பழங்குடியினர்கள், நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். முகாமில் பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் அன்றே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.