ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1,2 2018
செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம்
- இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார்.
- தேனீக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகளை பிரான்ஸ் தடை செய்தது
- பெருங்கடல் சராசரி வெப்பநிலை(OMT) கடல் வெப்ப மேற்பரப்பு வெப்பநிலையை விட பருவமழைக்காலத்தின் அளவைக் கணிக்கும் என்று புனேயின் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மைய (IITM) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- வாரணாசி, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (BHU) ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக 90% செயல்திறனைக் காட்டிய ஒரு கைடோசன் அடிப்படையிலான எஃகு அரிப்பு தடுப்பானை கடல் உணவுக் கழிவிலிருந்து உற்பத்தி செய்துள்ளனர்.
- ஒரு குறிப்பிட்ட புரதத்தின் செயல்பாட்டை (TRIM16) அல்சைமர்ஸ், பார்கின்சனின் மற்றும் அமியோடிராபிக் பக்கவாட்டு ஸ்களீரோசிஸ் (ALS) போன்ற நரம்பியல் நோய்களுக்கான ஒரு சாத்தியமான சிகிச்சை தலையீட்டு மூலோபாயமாக மாற்றலாம் என்று புபனேஷ்வரவை சார்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- மொரிஷியஸ் இந்தியாவின் நேரடி முதலீட்டு அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது
- சிங்கப்பூரில் 6 வது ஆசிய உச்சி மாநாடு – பொருளாதார மந்திரிகள் கூட்டம் (EAS-EMM) மற்றும் 15 வது இந்திய ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் (AEM) ஆகியவற்றில் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.
- பினாய் குமார் – ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளர்
- நீதிபதி தஹிரா சப்தர் – பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி
- ஆர் மாதவன் – ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின் [HAL] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் [CMD]
- பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி சுனில் மேத்தா – 2018-19க்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) புதிய தலைவர்.
- குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிக் – UEFA ஆண்டின் சிறந்த ஆண்கள் வீரர் விருது ஐரோப்பாவில் சிறந்த வீரராக வாக்களிக்கப்பட்டுள்ளார்.
- டாக்டர் பி.கே. மிஸ்ரா – ஆண்டின் சிறந்த மருத்துவ நபருக்கான மதிப்புமிக்க டாக்டர் பி.சி.ராயின் தேசிய விருது
- “நகரும், முன்னோக்கி நகரும் – அலுவலகத்தில் ஒரு வருடம்” புத்தகம் – (குடியரசுத் துணைத் தலைவராக அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில்) திரு.வெங்கையா நாயுடு எழுதிய நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.
- இங்கிலாந்தில் முதல் சர்வதேச கோ கோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளது இந்திய கோ கோ அணி
ஆசிய விளையாட்டு 2018
- 49 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி தங்கம் வென்றது.
- இந்திய ஆடவர் ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது
- பெண்கள் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
- 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது.
- பார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்– லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன்.
ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு