ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 10 2018
அக்டோபர் 10 – உலக மன நல தினம்
- பிரதமர் நரேந்திர மோடி அரியானா ரோஹ்தக் நகர் சாம்பலாவில் தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை திறந்து வைத்தார்
- உத்தரகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தின் முதல் மாசற்ற மின்சார பேருந்தின் சோதனை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
- ஹர்ஷா பரத்கோடி தெலுங்கானாவின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார்
- இலங்கை ரூபாய் மதிப்பில் 30 கோடி செலவில் இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம் இலங்கையில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- மேற்கு மத்திய வங்கக்கடலில் சூறாவளிப் புயல் ‘டிட்லி’ கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்தது.
- துஷன்பே, தஜிகிஸ்தான் நகரில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 வது அரசாங்கத் தலைவர் கவுன்சில், CHG, கூட்டத்தில் பங்கு பெறுகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
- துஷார் மேத்தா – இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல்
- சுனில் பாஸ்கரன் – புதிய ஏர் ஆசியா இந்திய தலைவர்
- அனைத்து பெண் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டம்
- அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்
- அடுத்த ஆண்டு குருநாகக் தேவின் 550 வது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாட திட்டம்
- உயர் தர இராணுவ ட்ரோன்கலை பாகிஸ்தானுக்கு விற்க சீனா திட்டம்
ஆசிய பாரா–விளையாட்டு
- ஹர்விந்தர் சிங் ஆண்கள் தனி ரீகர்வ் பிரிவில் [வில்வித்தை] தங்கம் வென்றார். ஆடவர் வட்டு எறிதல் போட்டி F11 பிரிவில் மோனு கங்காஸ் வெள்ளி வென்றார், முகம்மது யாசீர் ஆண்கள் குண்டு எறிதல் F46 பிரிவில் வெண்கலத்தை வென்றார்.
- நாராயண் தாகூர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், தூப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் தங்கம் வென்றனர்.
- ஆண்கள் வட்டு எறிதலில் சுரேந்தர் அனீஷ் குமார், ராம் பால் ஆண்கள் உயரம் தாண்டுதலில் மற்றும் குண்டு எறிதலில் விரேந்தர் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
- மலேசியாவில் சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஜூனியர் அணி தகுதி பெற்றது.