போர்ட் பிளேரில் உள்ள விமான நிலையம் அங்கீகாரம் பெற்ற குடியேற்ற சோதனை சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜலந்தரில் 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸை திறந்து வைத்தார்.
வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
ஷேக் ஹசீனா தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்து தீவுகளை விட்டு பபூக் புயலின் காரணமாக தப்பி ஓட்டம்.
இந்தியாவின் வேகமான ரயில் 18 டெல்லி-வாரணாசி இடையே விரைவில் தனது சேவையை தொடங்க உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம், பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்ய யோஜனாவை மேம்படுத்துவதற்காக தேசிய சுகாதார அமைப்பை தேசிய சுகாதார ஆணையமாக மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்.
நவோதயா வித்யாலய மாணவர்கள் சிலர் தற்கொலை செயத்ததை விசாரிக்க அரசு குழுவை நியமித்தது.
அசாம் உடன்படிக்கையின் பிரிவு 6 ஐ அமுல்படுத்துவதற்கு குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.
தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது தொடர்பாக தொழிற்சங்க சட்டம் 1926, சட்டதிருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கர்நாடகாவின் விஜயநகரில் நடைபெறும் மூன்றாவது பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சோனியா லேதர் மற்றும் சிம்ரஞ்சித் கவுர் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.