ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 11 2018
டிசம்பர் 11 – சர்வதேச மலைகள் தினம்
- 2018 தீம்:“#MountainsMatter”
டிசம்பர் 11 – சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாள்
- அசாமில் சட்டவிரோதமாக குடி ஏறிய மக்களுக்கு எதிராக 80களில் அசாம் இயக்கம் நடந்தது. இந்த இயக்கத்தின் புத்தகத்தை மாநில அரசு வெளியிடத் திட்டம்.
- பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்பைக்கு அருகில் குழாய் எரிவாயு இணைப்புகளை தொடங்கி வைத்தார்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்.
- கிட்டத்தட்ட 85 சதவீத ஐ.நா. நாடுகள் மக்கள் இடம்பெயர்வு ஒப்பந்தத்திற்கு உடன்பாடு.
- பிரான்சில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வரி சலுகைகள் உயர்த்தி அறிவுப்பு.
- சைபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்திய வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது.
- சக்திகாந்த தாஸ் – புதிய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
- தேசிய ஓய்வூதிய திட்டத்தில்(NPS) சில மாற்றங்களை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு. மத்திய அரசின் NPS பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்.
- தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான 31 மில்லியன் டாலர் கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
- கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் உள்ளானவர்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- சைபர் குற்றங்கள் மற்றும் சாதாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளது.