நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 28,29 2019
TNPSC Group 4 OnlineTestSeries 2019
முக்கியமான நாட்கள்
ஜூலை 28 – உலக ஹெபாடிடிஸ் [கல்லீரல் அழற்சி] தினம்
- உலக ஹெபாடிடிஸ் [கல்லீரல் அழற்சி] தினம் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஹெபாடிடிஸ் பி வைரஸை (எச்.பி.வி) கண்டுபிடித்து அந்த வைரஸை கண்டறியும் சோதனை மற்றும் தடுப்பூசியை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் பருச் ப்ளம்பெர்க்கின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி உலக ஹெபாடிடிஸ் [கல்லீரல் அழற்சி] தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம்
- இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஜூலை 29 – உலக புலிகள் தினம்
- உலகளாவிய புலிகள் தினம், ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று கொண்டாடப்படுகிறது. புலிகளைக் கொண்டாடுவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கான தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. புலி பாதுகாப்பு தொடர்பான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் இந்த தினம் தேர்வு செய்யப்பட்டது, இது நவம்பர் 23, 2010 அன்று உலகளாவிய புலி உச்சிமாநாட்டின் போது வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்
அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் நான்காவது சுழற்சி – 2018
- இந்த புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை ஆராய்தல், கால் தடத்தை வைத்து புலிகளின் இருப்பிடத்தை அறிவது, கழிவுகளைச் சேகரித்து அவற்றின் இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுதல் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பு முயற்சியாக நம்பப்படுகிறது. இந்தியாவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதற்கு முன் புலிகள் கணக்கெடுப்பு ஏற்கனவே 2006, 2010 மற்றும் 2014ல் எடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச செய்திகள்
ஹெபாடிடிஸ் பி வைரஸை வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக WHO தெரிவித்துள்ளது
- தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் உள்ள பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடன் வங்கதேசமும் ஹெபாடிடிஸ் பி வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஐந்து வயது குழந்தைகளிடையே இந்த கொடிய நோயின் தாக்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகியுள்ளது என்று WHO தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மாநாடு
முசோரியில் இமயமலை மாநாடு நடைபெறுகிறது
- உத்தரகண்ட் மாநிலத்தின், முசோரியில் இமயமலை மாநாடு நடைபெறுகிறது. இமயமலை மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு
- மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா லக்னோவில் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை திறந்து வைத்தார். 65,000 கோடி மதிப்புள்ள 250 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே தளவாட உச்சி மாநாடு
- நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி காத்மாண்டுவில் இந்தியா-நேபாள தளவாட உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். வர்த்தக மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாகவும், தொந்தரவில்லாமலும், செலவு குறைந்ததாகவும் மாற்றுவதில் ஸ்மார்ட் தளவாடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.
நியமனங்கள்
அருணாச்சல பிரதேசத்தின் புதிய டி.ஜி.பி.
- இட்டாநகர் காவல் தலைமையகத்தில் அருணாச்சல பிரதேசத்தின் புதிய போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (டிஜிபி) ஆர்.பி. உபாத்யாயா பொறுப்பேற்றார். இதற்கு முன் டி.ஜி.பியாக இருந்த எஸ்.பி.கே.சிங் மிசோரமுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவர் இந்த பொறுப்பைப்பெற்றார்.
ஐ.பி.எஸ் அதிகாரி வி.கே.ஜோஹ்ரி அடுத்த பி.எஸ்.எஃப் டிஜியாக நியமிக்கப்பட்டார்
- ஐபிஎஸ் அதிகாரி வி.கே.ஜோஹ்ரி எல்லை பாதுகாப்பு படையின் அடுத்த பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச கேடரின் 1984 பேட்ச் இந்திய போலீஸ் சேவை அதிகாரியான திரு ஜோஹ்ரி தற்போது அமைச்சரவை செயலகத்தின் கீழ் ராவில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
விளையாட்டு செய்திகள்
தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 8 பதக்கங்களை வென்றனர்
- இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் போட்டியில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலத்துடன் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு அடுத்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற உள்ளது
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் பதிப்பு அடுத்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு இந்த முடிவை அறிவித்தார்.
ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
- ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஹோக்கன்ஹெய்மில் நடைபெற்ற ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார். வெர்ஸ்டாப்பன் ஃபார்முலா ஒன் சீசனின் இரண்டாவது பட்டத்தை வென்றுள்ளார்.
ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டி
- இந்தோனேசியாவின் லாபுவன் பாஜோவில் நடைபெற்ற 23 வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ பிரிவில் ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், மற்றும் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவுர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
46வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி
- நடப்பு சாம்பியனான ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி 11 வது மற்றும் இறுதி சுற்றில் ஆந்திராவின் பிரத்யுஷா போடாவுக்கு எதிராக சமன் செய்து 46 வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.
தலிலா முஹம்மது தேசிய போட்டியில் 400 மீ தடைகள் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்தார்
- யு.எஸ். சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் தடைகள் தாண்டும் ஓட்டத்தை 52.20 வினாடிகளில் ஓடி 16 வயதான தலிலா முஹம்மது உலக சாதனையை முறியடித்தார்.
PDF Download
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்