நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 16, 2019
TNPSC Group 4 OnlineTestSeries 2019
தேசிய செய்திகள்
தேசிய டிஜிட்டல் ஹெல்த் புளூபிரிண்ட் அறிக்கை
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகளுக்காக தேசிய டிஜிட்டல் ஹெல்த் புளூபிரிண்ட் (என்.டி.எச்.பி) அறிக்கையை வெளியிட்டார்.
- NDHB இன் நோக்கம் , யுனிவர்சல் ஹெல்த் கவரேஜை திறம்பட ஆதரகிக்கக்கூடிய , மலிவான , சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான முறையில் ஒரு தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகும்.
மத்திய பிரதேசம்
இந்தூரிலிருந்து துபாய்க்குமுதல் சர்வதேச விமானம் புறப்பட்டது
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் சர்வதேச விமானம் 153 பயணிகளுடன் துபாய் புறப்பட்டது.இந்த இடைவிடா விமானம் வளைகுடா பகுதிகளுடன் நேரடி இணைப்பிற்கான பயணத்தையும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்த நீண்டகால விருப்பத்தையும் நிறைவேற்றியுள்ளது.
அறிவியல்
புதிய விண்வெளி படைப்பிரிவை உருவாக்குவதாக அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி
- பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு புதிய தேசிய இராணுவ விண்வெளி படைப்பிரிவை உருவாக்குவதாக அறிவித்தார். பிரெஞ்சு விமானப்படையின் ஓர் அங்கமாக அது செயல்படும் என்றும் தேசியப் பாதுகாப்பு நலனில் அக்கறை செலுத்தும் விதமாக விண்வெளி ராணுவப் பிரிவு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது ரஷ்யா
- ஜெர்மனியுடனான கூட்டு திட்டத்தில் கஜகஸ்தானின் பைகோனூரில் உள்ள காஸ்மோட்ரோமில் இருந்து விண்வெளிக்கு தொலைநோக்கியை அனுப்பியது ரஷ்யா. 2011 முதல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) அணிகளை அனுப்பும் ஒரே நாடு ரஷ்யா ஆகும். ஐ.எஸ்.எஸ் ஸின் அடுத்த பயணம் ஜூலை 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது ரஷ்ய விண்வெளி வீரருடன், ஒரு இத்தாலிய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
இமாச்சல பிரதேச ஆளுநர்
- ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கல்ராஜ் மிஸ்ராவை இமாச்சல பிரதேச ஆளுநராக நியமித்துள்ளார்.
குஜராத் ஆளுநர்
- ஆச்சார்யா தேவ்ரத் இமாச்சல பிரதேசத்திலிருந்து மாற்றப்பட்டு குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்டங்கள்
‘மியூசியம் கிராண்ட் திட்டம்”
- நம் நாட்டில் அருங்காட்சியக சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு “புதிய அருங்காட்சியகங்களை அமைப்பதற்கு அனுமதியும் நிதி உதவியும் வழங்கப்படும் என கலாச்சார அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது.மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் தற்போதுள்ள அருங்காட்சியகங்களை வலுப்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் அருங்காட்சியக மானிய திட்டத்தின் “கீழ் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்டுட்டுள்ளது. வழங்கப்படவுள்ள அதிகபட்ச நிதி உதவி மொத்த திட்ட செலவில் 80% ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்து.
தரவரிசை மற்றும் குறியீடுகள்
ஏடிபி தரவரிசை
- சமீபத்திய ஏடிபி தரவரிசை வெளியிடப்பட்டது.இதில் நோவக் ஜோகோவிச் 4500 புள்ளிகளுடன் உலகில் முதலிடத்தில் உள்ளார்.இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் முறையே ரபெல் நடால் ,ரோஜர் பெடெரர் உள்ளனர்.இவர்களிருவருக்கும் இடையே 450 புள்ளிகள் வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை
- உலகக் கோப்பை முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.அணிகள் தரவரிசையில், இங்கிலாந்து தனது முதல் உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்தியாவை விட மூன்று புள்ளிகள் முன்னேரி முதல் இடத்தை பிடித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
(ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை
- ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்ற (ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் உலகக் கோப்பையின் இரண்டாம் நாளில் இந்தியா இரண்டு தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டு தங்கம் உட்பட மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 16, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்