நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 27, 2019
தேசிய நிகழ்வுகள்:
தமிழ்நாடு:
ஜப்பானின் யான்மார், நிசி, நிறுவன கிளையை சென்னையில் திறக்க முடிவு
- யான்மார் குழுமம் மற்றும் ஜப்பானின் நிசீ எலக்ட்ரிக் ஆகியவற்றின் முதல் உற்பத்தி நிலையங்களை சென்னை, பொன்னேரியில் அமைக்க முடிவு.
அறிவியல்:
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு
- 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சியின் பின்னர், ஆப்பிரிக்காவின் மலாவியில் உலகின் முதல் மலேரியா தடுப்புமருந்து வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 435,000 உயிர்களை பலியாகும் கொடிய மலேரியா நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சியில் இந்த கன்டுபிடிப்பு முக்கிய பங்குவகிக்கும்.
விண்வெளி அறிவியல்:
செவ்வாய் கிரகத்தில் முதல் ‘நிலநடுக்கம்’ பதிவு
- செவ்வாய் கிரகத்தின் இன்ஸ்லைட் லாண்டர் எனப்படும் நாசாவின் ரோபோ முதன்முறையாக “செவ்வாய் நிலநடுக்கத்தை” பதிவு செய்துள்ளது, உள்துறை அமைப்பு (SEIS) கருவிக்கான நிலப்பரப்பு தரையிறங்குதலுக்கான சோதனையின் பொது, இந்த மெல்லிய நில அதிர்வு சமிக்ஞை கண்டறியப்பட்டது.
சர்வேதேச நிகழ்வுகள்:
கத்தாரின் வெளியேறும் விசா அமைப்பு முடிவடைய உள்ளது: ஐ. நா
- கத்தார் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்குமான தனது சர்ச்சைக்குரிய வெளியேறும் விசா அமைப்புகளை அகற்றுவதற்கு முடிவெடுத்துள்ளதாக ஐ. நா தகவல்.
வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:
சிறிய காப்பீடு கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய ஐஆர்டிஏஐ குழு அமைத்துள்ளது
- காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) சிறிய காப்பீடு ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளதுடன், அத்தகைய காப்பீடுகளுக்கான தேவையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும் அந்த குழுவுக்கு பொறுப்பு வழங்கியுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்:
ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர்
- கிளாரி போலோசாக் என்னும் பெண் நடுவர் ஆண்களுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டியில் முதல் பெண் நடுவராக பங்கேற்கவுள்ளார். 2017 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆண்கள் ஒரு நாள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் உலகின் முதல் பெண் கள நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2019
- பாங்காக்கில் நடைபெற்ற 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அமித் பங்ஹால் (52kg) தனது இரண்டாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்றார், மற்றும் பூஜா ராணி (81kg) பெண்கள் பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.
- 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்கள் உள்ளப்பட மொத்தம் 13 பதக்கங்கள் வென்றுள்ளது.
2019 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்
- இந்திய நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் 2019 உலக பாரா நீச்சல் போட்டி ஆண்கள் 200m IM (SM7 வகுப்பு) பிரிவில் குறைந்தபட்ச நுழைவு நேரத்தை (MET) அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
உலக கோப்பை கிரிக்கெட் 2019:
- மே 30 இங்கிலாந்தில் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 அதிகாரபூர்வ நடுவர்களில் மூன்று உலகக் கோப்பை வென்ற நடுவர்கள் மற்றும் ஒரு இந்திய நடுவர் சுந்தரம் ரவி பங்கேற்க உள்ளனர்.
பப்புவா நியூ கினியா ODI தரத்தை பெற்றுள்ளது
- உலக கோப்பை கிரிக்கெட் லீக் பிரிவு 2-போட்டிக்கு ஏற்கனவே தகுதியான பப்புவா நியூ கினியா (PNG) ஓமன் நாட்டிற்கு எதிராக ஒரு முழுமையான வெற்றியைப் பதிவு செய்து தனது ICC யின் ODI தரத்தை பெற்றுள்ளது.
ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2019:
- பி. வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வூஹான் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்தனர்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 27, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்