நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 3, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 3 2019

தேசிய செய்திகள்

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

போர்ட் பிளேரில் உள்ள விமான நிலையம் அங்கீகாரம் பெற்ற குடியேற்ற  சோதனை சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது

  • போர்ட் பிளேயரில் உள்ள வீர சவர்கார் சர்வதேச விமான நிலையம், அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் சரியான பயண ஆவணங்களுடன் இந்தியாவிற்குள் நுழைவதற்கு / வெளியேறுவதற்கான அங்கீகாரம் பெற்ற குடியேற்ற சோதனை சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குடியேற்ற சோதனைப் பணிகளுக்கான நோக்கத்திற்காக அந்தமான் நிக்கோபார் காவலர்கள் ‘சிவில் ஆணையமாக’ நியமிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப்

106வது இந்திய அறிவியல் காங்கிரஸ்

  • பிரதமர் நரேந்திர மோடி ஜலந்தரில் 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸை திறந்து வைத்தார். விவசாயிகளுக்கு உதவும்படியில் புதிய குறைந்த விலை தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, அவர்களது வாழ்வாதாரத்திற்காக பணியாற்ற வேண்டும் என பிரதமர் வேண்டினார். 

சர்வதேச செய்திகள்

வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்

  • வங்காளத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்காவில் பதவி ஏற்றனர். ஷேக் ஹசீனா ஜனவரி 10ம் தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

புயல் பபூக்

  • பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்து தீவுகளை விட்டு பபூக் புயலின் காரணமாக தப்பி ஓட்டம்.

வணிகம் & பொருளாதாரம்

ஆர்.பி. எம்எஸ்எம்இக்கு நிவாரணம்

  • ரிசர்வ் வங்கி, ஏற்கனவே செலுத்தப்பட்ட கடன்களுக்கான 25 கோடி ரூபாய்க்கு ஒரு முறை மறுசீரமைப்பை அனுமதித்தது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் நிலையான சொத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவு, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி செயல்படுத்தல் ஆகியவற்றினால் பண நெருக்கடியை எதிர்கொள்ளும் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) பெரும் உதவியாக அமையும். 

திட்டங்கள்

ரயில் 18

  • இந்தியாவின் வேகமான ரயில் 18 டெல்லி-வாரணாசி இடையே விரைவில் தனது சேவையை தொடங்க உள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குவதால் 11 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும் பயணம் 8 மணி நேரத்தில் முடிந்து இரண்டு மணி நேரம் பயண நேரத்தை சேமிக்கிறது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய சுகாதார அமைப்பின் மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • மத்திய சுகாதார அமைச்சகம், பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்ய யோஜனாவை மேம்படுத்துவதற்காக தேசிய சுகாதார அமைப்பை தேசிய சுகாதார ஆணையமாக மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • விஜயா வங்கி, தேனா வங்கியை பரோடா வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

நவோதயா வித்யாலய மாணவர்கள் சிலர் தற்கொலை செயத்ததை விசாரிக்க அரசு குழுவை நியமித்தது

  • நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்ததை விசாரிக்க குழுவை நியமித்துள்ளதாக மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அசாம் உடன்படிக்கையின் பிரிவு 6- அமுல்படுத்துவதற்கு குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • அசாம் உடன்படிக்கையின் 6 வது பிரிவை அமல்படுத்துவதற்கான உயர் மட்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போடோ சமுதாயத்துடன் தொடர்புடைய மற்ற பிரச்சினைகள் மற்றும் 2003 ஆம் ஆண்டின் தீர்வுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிற்சங்க சட்டம் 1926, சட்டதிருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது தொடர்பாக தொழிற்சங்க சட்டம் 1926, சட்டதிருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் மத்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை எளிதாக்கும். 

விளையாட்டு செய்திகள்

மூன்றாவது பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • கர்நாடகாவின் விஜயநகரில் நடைபெறும் மூன்றாவது பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், உலக சாம்பியன் பட்டம் வென்ற சோனியா லேதர் மற்றும் சிம்ரஞ்சித் கவுர் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!