தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சொன்ன விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஒருசில மாதங்கள் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்.
மீண்டும் ஊரடங்கு?
தமிழகத்தில் கொரோனாவால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவின் மூன்று அலைகளில் சிக்கி ஏகப்பட்ட மக்கள் தங்களுக்கு நெருக்கமான சொந்தங்களை இழந்து இருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றனர். அரசின் துரித நடவடிக்கையால் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசிசெலுத்தி இருக்கின்றனர்.
பணத்தை வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றி அனுப்பி விட்டீங்களா? திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்!
அதனால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இல்லாத நாள் வந்துள்ளது. அதனால் பலர் சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் பல வழிபாட்டு தளங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதனால் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்து இருக்கின்றனர். அதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
இந்நிலையில் இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதன் காரணமாக 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை கழுவுவது உள்ளிட்ட விதிமுறைகளை இன்னும் ஒருசில மாதங்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனோ முடிவுக்கு வந்து விட்டது என எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். அதனால் மீண்டும் ஊரடங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.