அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, சலவைப்படி, குழந்தைகளுக்கான கல்விபடி உள்ளிட்ட அனைத்து நிலுவை தொகைகளை வழங்க உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கொரோனா பரவலால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை ரத்து செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக அகவிலைப்படி அண்மையில் உயர்த்தப்பட்டு தற்போது 31% அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!
அதன்படி புதுச்சேரியிலும் இந்த அகவிலைப்படி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை புதுவை அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2016ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவை வழங்கப்படாமல் இருந்த நிலுவைத்தொகை அண்மையில் வழங்கப்பட்டது. இதனை மத்திய அரசு உதவியுடன் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இதே போல் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, போக்குவரத்து படி, குழந்தைகளுக்கான கல்வி, சலவைப்படி வழங்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலுவைத்தொகை வழங்க புதுச்சேரி அரசுக்கு 183 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்பு விரைவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்ததுள்ளது. மேலும் இதற்கான பணிகளை புதுவை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.