பணத்தை வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றி அனுப்பி விட்டீங்களா? திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்!
இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது ஏராளமான எதிர்பாராத தவறுதல்கள் ஏற்படுகிறது. மேலும் தற்போது நீங்கள் தவறுதலாக வேறு ஒருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பி விட்டீர்கள் என்றால் அந்த பணத்தை திரும்ப பெற முடியும். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
பணப்பரிமாற்றம்
இந்தியாவில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. அத்துடன் தற்போதும் விடுமுறை தினத்தில் அனைத்து வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு முறைகேடுகளும், எதிர்பாராத தவறுதல்களும் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக நீங்கள் ஒருவருக்கு பணத்தை அனுப்பும் போது அக்கவுண்ட் நம்பர் என்டர் செய்ய வேண்டும். இதில் தவறுதலாக நீங்கள் வேறு ஒரு எண்ணை டைப் செய்து விட்டால் வேறு ஒருவருக்கு பணம் சென்றிடும்.
10, ITI & டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!
இந்த சூழ்நிலையில் சுலபமான முறையில் பணத்தை திரும்ப பெற தற்போது வசதிகள் வந்துள்ளது. மேலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க ஹேக்கர்கள் கால் அல்லது இமெயில் தவிர்க்க வேண்டும். அத்துடன் நெட் பேங்கிங் பின் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவை யாரிடமும் பகிரக்கூடாது. அத்துடன் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும். தங்களின் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இதனை கடைபிடித்தால் போதும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். மேலும் தற்போது தவறுதலாக பணத்தை பரிமாற்றம் செய்தவுடன் வங்கி மற்றும் உள்ளூர் வங்கி மேலாளருக்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work From Home!
மேலும் தவறுதலாக பணத்தை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளை காண்போம்.
1. முதலாவதாக தவறுதலாக பணத்தை பரிமாறி கொண்டால் வங்கி மற்றும் தங்கள் உள்ளூர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் சரியான பரிவர்த்தனை விவரங்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
2. அதன்படி வங்கி தங்களுக்கு உதவி புரியும். மேலும் இந்த பணப்பரிமாற்றம் நிகழ்ந்த வங்கி அல்லது கிளையை பற்றிய விவரங்களை தங்களுக்கு வழங்கும்.
3. அந்த வங்கியிலிருந்து பரிவர்த்தனையை மீண்டும் திரும்ப தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறலாம். அதன்படி பெறுநரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4. மேலும் பணத்தை திரும்பப் பெற ரிசீவர் மறுத்தால் சட்ட முறையைப் பயன்படுத்தி மீண்டும் பணத்தை பெற முடியும்.