கோவா மாநிலத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!
கோவா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடிப்பதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள்:
கோவா மாநிலம் முழுக்க முழுக்க சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பி உள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக சுற்றுலா துறையினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா துறை முழுவதுமாக முடங்கி உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைவருமே கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிறு கிழமை நிலவரப்படி, கொரோனா தொற்று புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தேச பக்தி பாடங்கள் அறிமுகம், யோகா வகுப்புகள் – முதல்வர் அறிவிப்பு!
அதன்படி, புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,72,506 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,171 ஆகவும் உள்ளது என்று ஒரு மாநில சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார். நேற்று மட்டும் 85 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,68,423 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது மாநிலம் முழுவதும் 912 கொரோனா பாதித்த நபர்கள் உள்ளனர். நேற்று மட்டும் 4,860 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 23ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுதல்கள் மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.