
IPL 2025: சென்னை அணியில் இணைந்த புதிய வீரர்.. நிர்வாகம் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்.. இனி பிளே ஆப் செல்வது உறுதி..!!
IPL 2025 தொடரில் சென்னை அணி இதுவரை சிறப்பாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. இதனால் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு நடைபெற்ற 2 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி தோல்விகளை பெற்றுள்ளது. மேலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அடுத்து வரவிருக்கும் 6 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதை கருத்தில் கொண்டு சென்னை அணி பேட்ஸ்மேன்களில் டாப் ஆர்டரை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற “SA டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன், டெவால்ட் பிரீவிஸ் CSK அணியில் இணைந்துள்ளதாக சென்னை அணி தனது X வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது”. மேலும், கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாததால் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


























