யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் ஆகிய இரண்டு வங்கிகளிலும் கிரெடிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்தால் தனி கட்டணம் செலுத்தப்படும்.
தனி கட்டணம்
வாங்கும் சம்பளம் செலவுக்கு போதாமல் இருப்பதால் மக்கள் பலர் கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பல வங்கிகள் மக்களை கிரெடிட் கார்டு பயன்படுத்த வைக்க பல்வேறு சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வந்தது. ஆனால் தற்போது யூட்டிலிட்டி கட்டணங்களுக்கு சில ரிவார்டு பாயிண்ட்களை வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அகற்றி உள்ளனர்.
விமானப்படை பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஏப்ரல் 16 கடைசி நாள்!
அந்த வரிசையில் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யூட்டிலிட்டி பில்களுக்கு மொத்தம் ரூ.15,000க்கு மேல் கட்டணம் செலுத்தினால் 1% சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்து வசூல் செய்யும் என தெரிவித்துள்ளது. அதே போல ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்களின் மொத்த யூட்டிலிட்டி பில் பேமெண்ட்கள் ரூ. 20,000க்கு மேல் இருந்தால் மட்டுமே 1% மற்றும் ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது.