மத்திய அரசின் ‘பசு அறிவியல் தேர்வு’ – யுஜிசி புதிய உத்தரவு!!
மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (தேசிய பசு ஆணையம்) நடத்தும் ‘பசு அறிவியல்’ தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.
பசு அறிவியல் தேர்வு:
நாடு முழுவதும் இளம் மாணவர்களிடம் நாட்டு பசு குறித்த முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் ‘பசு அறிவியல்’ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் ‘ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்’ (தேசிய பசு ஆணையம்) மூலமாக நடத்தப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்த ஆணையம் 2019 ஆம் ஆண்டு அறிவியல் ரீதியாகப் பசுக்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று நடத்தப்படுகின்றன. இதற்கான தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை. இந்த தேர்வுகளை நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வுகள் இணையதளம் மூலமாக நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் 68,775 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – புதிய தொழிற்கொள்கை!!
இந்நிலையில் யுஜிசி வெளியிட்ட அறிவிப்பின் படி ‘காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்’ என்ற தலைப்பில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் பங்குபெற கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலமாக மாணவர்களுக்கு பசுவின் முக்கியத்துவத்தை அறியவும், பால் கொடுத்தபின் பசுவின் தொழில் வளர்ச்சி குறித்து அறியவும் வழிவகை செய்கிறது. இந்த தேர்வில் பங்கேற்கும் அனைவர்க்கும் சான்றிதழ் மற்றும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்