தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் தடுப்பூசி திருவிழா – தலைமை செயலர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஏப்ரல் 14, 15, 16 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது.
தடுப்பூசி பணிகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் மாநில அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும், பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இந்திய பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களில் காணப்படும் கொரோனா பரவலின் நிலவரம் குறித்து பேசப்பட்டது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அதில் நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா என்று ஏற்படுத்தி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி சுற்றுலா தலங்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி – கொரோனா பரவல் எதிரொலி!!
முன்னதாக 4 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 5 லட்ச முன்கள பணியாளர்கள், 60 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 9 லட்சம் பேர் உட்பட பலருக்கு முதல் கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து ஏப்ரல் 14 முதல் 16 வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தகுதியான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்