நீலகிரி சுற்றுலா தலங்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி – கொரோனா பரவல் எதிரொலி!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
50 சதவீத சுற்றுலா பயணிகள்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய அரசின் அறிவிப்பின்படி அந்தந்த மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்திலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதவழிபாட்டு தலங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாநில அரசு அறிவித்திருந்தது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மேலும் சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி சுற்றுலா தலங்களில் நாளை (10-03-2021) முதல் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியாளர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக பூங்காக்களில் புல்வெளிகளில் அமரவும், விளையாடவும் தடை விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்