தமிழகத்தில் மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் – அரசு அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் மே 1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து 60 & 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவசமாக நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – தலைமை செயலர் வெளியீடு!!
இந்த தடுப்பூசி செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். வழக்கத்தை விட கூடுதலாக RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலை 10 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தவிர மத்திய அரசின் அறிவிப்பின் படி மே 1 ஆம் தேதி அன்று கேரளா மாநிலத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.