தமிழகத்தில் 2 மாதத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் 2 மாதத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
தமிழகத்தில் 2 மாதத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
தமிழகத்தில் 2 மாதத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் உயர்ந்து வருகிறது. தற்போதுள்ள சூழலை கணக்கில் கொண்டால் இன்னும் 2 மாதங்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு உயரும் என மருத்துவ குழு எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 11 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை உற்று நோக்கும் போது கொரோனா தாக்கத்தினால் தமிழகத்தில் 10 லட்சம் வரை பாதிப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதுள்ள சூழலை பார்க்கும் போது இன்னும் இரண்டே மாதத்தில் 10 லட்சம் வரை பாதிப்புகள் பதிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் முன் கூட்டியே தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 17 ஆம் தேதி வரை 780 கொரோனா புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் கொரோனா தொற்று ஆயிரம், ஆயிரமாக அதிகரித்து ஏப்ரல் மாதத்தில் 6 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்த போது பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டது. அதனால் தான் கொரோனாவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்த ஆண்டில் கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளது. தவிர நோய் பாதிப்பு அதிகளவு பெருகி வருகிறது.

ஏப்ரல் 26 முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம் – ஜிப்மர் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஒரே நாளில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதன்படி கொரோனா பரிசோதனை குறைவாக உள்ள தருமபுரி, சேலம், திருப்பத்தூர், விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் விரைந்து பரிசோதனையை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலர் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!