தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று (மே 10) முதல் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் சுமார் 2.07 கோடி மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவாரண நிதி:
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் மக்களுக்கு நிவாரணங்களை அளித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவியாக இலவச ரேஷன் பொருட்களுடன், 4000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மாநில முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் படி நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்து – ICMR எச்சரிக்கை!!
தொடர்ந்து கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று (மே 10) முதல் ரேஷன் அட்டைதாரர்கள் 2.07 கோடி பேருக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (மே 10) துவங்கி வைக்கிறார். இந்த கொரோனா நிவாரண நிதியின் டோக்கன் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் துவங்கிய நிலையில் அடுத்த வாரம் மே 15ஆம் தேதி முதல், 2000 ரூபாய் நிவாரணத்தை நியாய விலைக்கடைகளில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள படி, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே ரேஷன் கடைகள் செயல்படும் என்பதால், டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.