தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா – மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் ஜெட் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எங்கு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீண்டும் ஊரடங்கு:
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3ம் அலை ஏற்பட்டது. மேலும் டெல்டாவை போல இல்லாமல் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது. இருப்பினும், கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், ஓமிக்ரான் கொரோனாவால் மூன்றாம் அலை மிக வேகமாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. இதனால் சில வாரங்களிலேயே கொரோனா கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ கடந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,77,570 ஆக அதிகரித்துள்ளது. அதன் மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 12,158 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அதிகரிக்கும் கொரோனா தொற்று! அரசு முடிவு!
கொரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று மட்டும் 1,321 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் சென்னையில் 1,025 பேருக்கும், செங்கல்பட்டில் 369 பேருக்கும், கோயம்புத்தூரில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக கொரோனா உயிரிழப்புகள் இல்லை. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், தமிழகத்தில் வேகமாகப் பரவும் BA4, BA5 வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தைத் தாண்டி இருந்தாலும் கூட, பாசிட்டிவ் விகிதம் 7 ஆகவே உள்ளது. மேலும் செங்கல்பட்டை (14%) தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 10 ஐ தாண்டவில்லை. அதிலும் குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 5க்கும் கீழாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல அறிவுறுத்தல்களை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. எனவே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.