இந்தியாவில் குழந்தைகள் இடையே தீவிரமெடுக்கும் கொரோனா – 3வது அலை தொடக்கம்?
கொரோனா 2ம் அலை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனிடையில் குழந்தைகளுக்கு அதிகளவில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் 3வது அலை அச்சம் தீவிரம் அடைந்து உள்ளது.
கொரோனா 3ம் அலை:
நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவிய கொரோனா தொற்று 3ம் அலையில் குழந்தைகளை தாக்கும் என கூறப்பட்டது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா 2ம் அலை படிப்படியாக குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
செப்.17 ஆம் தேதி 8 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
இதனிடையே கொரோனா தொற்று குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 1 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்படுவது 2.72 முதல் 3.59% ஆக இருந்தது. 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்தில் இருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்!
நாடு முழுவதும் 2ம் அலை தொடர்ந்து 3ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. கூடுதல் பரிசோதனை இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிசோரம் மாநிலத்தில் குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு 16.48 சதவீதமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.