செப்.17 ஆம் தேதி 8 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

0
செப்.17 ஆம் தேதி 8 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு!
செப்.17 ஆம் தேதி 8 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு!
செப்.17 ஆம் தேதி 8 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும், செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா 2 ஆம் அலை பரவலை மீண்டு வந்து கொண்டிருக்கும் கர்நாடகா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளிகளில் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்த தட்சிண கன்னடா மாவட்டத்தில் மட்டும் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வந்தது.

தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்!

அதாவது கேரளாவை ஒட்டியுள்ள கர்நாடக எல்லைப்பகுதியான, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வந்த புதிய கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அம்மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அனால் தற்போது அம்மாவட்டத்தில் நிலவி வரும் கொரோனா சூழலை கவனத்தில் கொண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

அதே போல செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அறிவிக்கப்பட்டபடி, பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கும் போது முறையான நோய் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று அம்மாவட்ட துணை ஆணையர் அறிவித்துள்ளார். இதனிடையே தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள 99% பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துள்ளனர்.

செப்.27 முதல் ‘இந்த’ ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail தடை? ஷாக் அறிவிப்பு!

மேலும் வகுப்புகளில் நுழையும் ஒவ்வொரு குழந்தைகளும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றுவதையும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல தொடர உள்ளது. இப்போது நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதங்கள் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும் எனவும் கேரளாவை சேர்ந்த மாணவர்களும் விடுதிகளில் தங்கிக் கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!