அதிகரிக்கும் கொரோனா தொற்றும் முதல்வரின் அறிவிப்புகளும்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் தற்போது N95 மாஸ்க்குகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் அதிகமாக ஈரோட்டில் 10 பேர்க்கு (மொத்தம் 24) புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் மதுரையில் 1, சென்னையில் 5 மற்றும் கரூரில் 1 நபருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் 17,089 படுக்கை வசதிகள் கொரோனாவிற்கு என தனியாக சிகிச்சை அளிக்க தயாராக உள்ளன.
- தமிழகத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
- 1.5 கோடி மாஸ்க்குகள், 25 லட்சம் என் 95 மாஸ்க்குகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வெண்டிலேட்டர்களும் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன.
- தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 121 பேரின் ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
- தமிழகத்தில் அதிகம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள்.
- மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை தவிர இதிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |