தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை!!
நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகம், உட்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று மிக அதிகமாக காணப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது இதனை குறைக்கும் வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி இந்தியாவில் தற்போது 1.36 கோடி பேர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 1,61,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 879 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போது இதுகுறித்து மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டள்ளது. அதன்படி நாட்டில் தமிழகம், கேரளா, மராட்டியம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலையில் தீவிரமாக பரவும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
இந்த 10 மாநிலங்களில் மட்டுமே 80.08% கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள இந்த 10 மாநிலங்களில் சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. மேலும் இந்த 10 மாநிலங்களில் தடுப்பூசி பணிகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாட்டின் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.