அண்ணா பல்கலையில் தீவிரமாக பரவும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
சென்னையில் உள்ள அண்ணா பல்கலை இணைப்பு அங்கீகாரத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 550 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு சென்று தங்களது பணியை செய்து வருகின்றனர்.
Gold Rate in Chennai – இன்றைய தங்க விலை நிலவரம்!!
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும், அலுவலகத்தில் இருக்கைகளை அருகருகே அமர்த்த வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.