கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் – 6 மாதங்கள் நீட்டிப்பு!!
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாயர்கள் மருத்துவ துறை ஊழியர்களுக்கு தற்போதைய கொரோனா இரண்டாம் பரவல் காரணமாக காப்பீடு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காப்பீடு திட்டம் :
கொரோனா இரண்டாம் பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்கின்றனர்.
மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல், மக்களுக்காக சேவை செய்கின்றனர். மேலும் காவல்துறை அதிகாரிகள், எல்லா நேரங்களிலும் பணி செய்ய தயார் நிலையில் உள்ளனர். சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் இரவு, பகல் பாராமல் பொது சேவையில் ஈடுபடுகின்றனர். தன்னலமற்ற பணியை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!
இதனால் இவர்களுக்காக பிரதமர் தலைமையில் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் பரவல் அதிகரித்து வருவதால் முன்கள பணியாளர்களின் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா நிவாரணங்கள் குறித்த விவாதிப்பில் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை மேலும் 6 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்