மே 15 வரை பல்கலை மாணவர்களுக்கு கோடை விடுமுறை – பல்கலை நிர்வாகம் அறிவிப்பு!!!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று மற்றும் மாநில அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களுக்கு மே 15ம் தேதி வரை லக்னோ பல்கலை கோடை விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 30,983 பேர் தொற்று பாதிப்புக்குள்ளான நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 13.13 லட்சம் ஆக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,162 ஆக பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், லக்னோவில் மட்டும் நேற்று 3,342 புதிய தொற்றுகளும், 25 பேர் இறப்பும் பதிவாகியுள்ளது.
இந்தியாவுக்கு 11 கோடி கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசு விளக்கம்!!
மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தொற்றின் பாதிப்புகள் மோசமான நிலையை அடைந்து வருகிறது. மருத்துவப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. லக்னோ பல்கலையில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 3ம் தேதியான இன்று இறுதி நாளாகும். கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் மாணவர்கள் பல்கலைக்கு வந்து செல்ல சிரமங்கள் இருப்பதால் மே 15ம் தேதி வரை பல்கலைக்கு கோடை விடுமுறை அளிப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையின் போது இதுவரை நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும் நிறுத்தப்படும். இந்த அறிவிப்பு பல்கலையை சேர்ந்த அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். விடுமுறை நாட்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போன்ற அனைவருக்கும் பல்கலையில் அனுமதி இல்லை.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்