தமிழகத்தில் மின்தடை – உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் மின்தடை - உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழகத்தில் அவ்வபோது மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்வெட்டை நிரந்தரமாக தவிர்க்க தேவையான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம்:

தமிழகத்தில் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் மற்றும் 15,000 மெகாவாட் நீரேற்று மின் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டை நிரந்தரமாக தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் அதிகபட்சமாக 40,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மின் உற்பத்தி திறனை அதிகரிக்க வெளி சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கும் நடவடிக்கையும் மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தமிழகத்தில் கோடை காலத்தில் ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய இப்போதே திட்டமிட வேண்டும் எனவும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!