தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு & பள்ளி, கல்லூரிகள் மூடல்? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவதால் மே 1 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால் மக்கள் அதனை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அறிவிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோர பிடியில் இருந்து மக்கள் சிக்கி தவித்து வந்தனர். சில மாதங்களாகத் தான் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். அதற்கான தேதி மற்றும் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால் சீனாவில் 2 மாதங்களுக்கு முன் கொரோனா நான்காம் அலை பரவத் தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாக இந்தியாவிலும் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த 2 நாட்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்களில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
TCS, HCL Tech & Infosys நிறுவனங்களில் 1.98 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!
இது குறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் சிலர் மே 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். மேலும் அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இந்த செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமாகும் நிலையில் கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, ஞாயிறு சனி முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.