TCS, HCL Tech & Infosys நிறுவனங்களில் 1.98 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!
கடந்த சில ஆண்டுகளை விட டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனம், Infosys, HCL போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் வளர்ச்சியடைந்து வருவதையொட்டி இந்த நிதியாண்டில் மட்டுமே 1.98 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனம், Infosys, HCL நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த பெரிய நிறுவங்களில் இருந்தும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கவில்லை. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் இந்தாண்டு காலியாக இருக்கும் பணியிடங்களை HCL, Infosys, HCL நிறுவனங்கள் நிரப்பவுள்ளனர்.
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு அளித்த விளக்கம்!
டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் இன்போசிஸ் போன்ற முக்கியமான பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். தற்போதைக்கு மூத்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று வேலை செய்து வருகின்றனர். தற்போது 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் வேலை செய்து வருகின்றனர். மீதி 95 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து தான் பணியாற்றி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் மட்டுமே 1,98,000 பேரை பணியமர்த்தியுள்ளனர். இந்த மூன்று நிறுவனங்களுமே கடந்த ஆண்டுகளை விட 56% பணியாளர்களை கூடுதலாக பணியில் அமர்த்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே HCL நிறுவனத்தில் 3593 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கும் இந்த நிறுவனங்கள் சம்பள உயர்வை வழங்கி வருகின்றனர்.