பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பணியின் போது விபத்து நடந்து பணியில் மீண்டும் தொடர்ந்தாலும் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் அறிவித்து உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள்:
மத்திய அரசு ஊழியர்கள் பணியின் போது ஊனம் அடைந்து பணியில் தொடர்ந்தாலும், அவருக்கு இழப்பீட்டு தொகை உடல் உறுப்பு பாதிப்பின் அடைப்படையில் மதிப்பிட்டு வழங்கப்படும்.
TNPSC உதவி இயக்குனர் & உதவி கண்காணிப்பாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !
இழப்பீடு:
மத்திய அரசில் 1.1.2004 ம் ஆண்டிற்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் (என்பிஎஸ்) உள்ளவர்களுக்கு மத்திய சிவில் சர்விசஸ், சிறப்பு ஓய்வூதிய திட்ட விதிமுறைகளில், இது போல் முன்பு இழப்பீடு பணியில் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை.
ரூ.33 ஆயிரம் ஊதியத்தில் மின்சாரத் துறை வேலைவாய்ப்பு !
இந்த புதிய உத்தரவு மூலம் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களும், சிறப்பு ஓய்வூதிய விதிமுறைகளின் கீழ் உள்ள அனைத்து பயன்களையும் பெறலாம். அதாவது, அரசு ஊழியர்கள் பனியின் போது ஊனம் அடைந்து பணியில் தொடர்ந்தாலும், அவருக்கு இழப்பீட்டுத் தொகை, உடல் உறுப்பு பாதிப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.
மத்திய அமைச்சர்:
இந்த புதிய அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், “விதிமுறைகளை எளிதாக்குவதாகவும், பாரபட்சமான உட்பிரிவுகளை அகற்றவும் மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது” எண்டு கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்