மணிப்பூர் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க குழு – உச்சநீதிமன்றம் உத்தரவு!
மணிப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க முன்னாள் பெண்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் அறிவிப்பு
மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 3 ஆம் தேதி நடந்த கலவரத்தில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
அதிரடியாய் குறைந்த தக்காளியின் விலை – அள்ளிச்செல்லும் தாய்மார்கள்!
முன்னதாக ஆக.1 ஆம் தேதி நடந்த விசாரணையில், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் (ஓய்வு) ஷாலினி பி ஜோஷி மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.