மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் – எச்சரிக்கும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை!
தமிழகத்தில் கல்வியியல் கல்லூரிகள் SC, ST மாணவர்களிடம் அதிகமாக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால் இதனை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை அனைத்து கல்லுாரிகளையும் எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
கல்வி கட்டணம்
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி படிப்பை தொடருவதற்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் SC, ST மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை மேற்கொள்ள கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வி உதவித்தொகையை கல்லூரி நிர்வாகம் வசூலித்த பிறகும், மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
அத்துடன் இந்த கட்டணம் வசூலிப்பதற்கான ரசீதுகளையும் கல்லூரி நிர்வாகம் தருவதில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்தும் இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை அனுப்பியுள்ளது.
TNUSRB SI வேலைவாய்ப்பு விவரங்கள் 2023 – விண்ணப்பிக்கும் தேதி விவரங்களுடன்…!
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் B.Ed, M.Ed, B.Sc, B.A உள்ளிட்ட படிப்புகளை பயிலும் SC, ST மாணவர்களிடம் உதவித்தொகையும் பெற்றுக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரித்துள்ளது. இதனை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது பல்கலை விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.