பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து ??
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதினால் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊடரங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லுரிகள் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
10, 12 மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து:
கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஒடிஷா ஆகியவற்றில் நடைபெற இருந்த 10, 12 மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து அரசு செய்தது. மேலும் 1 முதல் 9 வகுப்பு வரை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஊடரங்கு தொடங்கிய காலத்தில் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்ற மகிழ்ச்சியான செய்தியை அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலுவையில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்:
தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில், தேர்வுகளை நடத்துவது என்பது கேள்விக்குறிய உள்ளது. எனவே, லட்சங்கானக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பும் தேர்வு அரசு ரத்து செய்யாத ?? என்பது தான்.
இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு:
பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவது அல்லது தேர்வை தள்ளி வைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உத்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளன.