அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

0
அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவியதால் கடந்த மார்ச் முதல் அனைத்து பள்ளி கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மேலால் மாற்று வழியில் தேர்ச்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதனால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளுவதில் அனைத்து பல்கலையும் ஈடுபட்டுள்ளன. தற்போது அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் உள்ள நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அம்மாநில கல்வி துறை முடிவு செய்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததினால் இவ்வாறு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. மேலும் இளங்கலை முதல், இரண்டாமாண்டு தேர்வுகளும் மற்றும் முதுகலை முதலாமாண்டு தேர்வுகளையும் தள்ளி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்னரே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மேலும் அதுவரையில் மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு உதவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!