
விரைவில் நடைமுறைக்கு வரும் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம்.. முதற்கட்டமாக இயக்கப்படும் 1,842 புதிய பேருந்துகள்..!!
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றன. மேலும், சிறிய தூரம் வரையிலான பயணம் மேற்கொள்ளும் பயனாளர்களுக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் மினி பேருந்துகள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நகரின் முக்கிய இடங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் இந்த மினி பேருந்துகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், “தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தின் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























