பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை ! – துணை வேந்தர் விளக்கம்

0
பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை ! - துணை வேந்தர் விளக்கம்
பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை ! - துணை வேந்தர் விளக்கம்

பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை ! – துணை வேந்தர் விளக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை எனவும் தேர்வுகள் தேர்வு விடைத்தாள்களை புகைப்படம் எடுத்தால் போதும் எனவும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்து உள்ளார்.

செமஸ்டர் தேர்வு :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரியர் தேர்வுகள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் மூலம் பொறியியல், கலை, அறிவியல் என அனைத்து பாடப்பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆன்லைன் தேர்வு இல்லை !

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லை என்றும், ஆன்லைனில் அனுப்பப்படும் கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வீட்டில் தேர்வு எழுத வேண்டும் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி விளக்கம் அளித்துள்ளார். தேர்வை 2 மணி நேரத்தில் எழுதி மாணவர்கள் புகைப்படம் எடுத்து மீண்டும் ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விதிமுறைகள் :
  • மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஏ4 தாளில் தேர்வெழுதி அவரவர் பல்கலைக்கழக அல்லது கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • வினாத்தாட்கள் மாணவர்களுக்கு இணையதளம் அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
  • மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் 90 நிமிடங்களில் தேர்வினை எழுதி முடிக்க வேண்டும்.
  • விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!