சென்னை பல்கலையில் அரியர் தேர்வுகள் ! – மாணவர்கள் அதிர்ச்சி

0
சென்னை பல்கலையில் மீண்டும் அரியர் தேர்வுகள் ! -மாணவர்கள் அதிர்ச்சி
சென்னை பல்கலையில் மீண்டும் அரியர் தேர்வுகள் ! -மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை பல்கலையில் மீண்டும் அரியர் தேர்வுகள் ! -மாணவர்கள் அதிர்ச்சி

கொரோனா தொற்றினால் தேர்வுகள் நடக்காத நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் ஆனது அரியர் மாணவர்களுக்கு என ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள தகவல்களின்படி அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

கல்லூரி தேர்வுகள் !

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டது. இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தாலும் கல்வியாளர்கள், யுஜிசி போன்ற கல்வி வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

மாணவர்கள் அதிர்ச்சி !

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரியர் தேர்ச்சி தொடர்பாக எந்த ஒரு முடிவும் மற்றும் தகவலினையும் வெளியிடக்கூடாது என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டு இருந்தது, இதனால், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரியர் மாணவர்கள் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டது.

முன்னதாக சென்னை பல்கலைக்கழகமானது அரியர் மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கியது. ஆனால் தற்போது வரும் 21ம் தேதி முதல் அரியர் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!