சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு – இன்றைய நிலவரம்!
சென்னையில் இன்று (செப்டம்பர் 3) காலை துவங்கிய ஆபரணத் தங்க நகைகளின் விற்பனையானது, சவரனுக்கு ரூ.32 குறைந்து, 22 கேரட் மதிப்புள்ள ஒரு சவரன் தங்க நகைகளின் விலை ரூ.35,608 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை சரிவு
கடந்த 4 மாத கால கொரோனா அலை தாக்கத்துக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வந்த தங்க நகைகளின் விற்பனை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் நகைக்கடைகளின் திறப்பு என்பது அரசின் கடைசி திட்டமாக இருந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் நகைக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, விற்பனையும் படு ஜோராக நடந்து வருகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்! பள்ளிகள் மூடப்படுமா?
இதற்கிடையில் ஆர்வமுடன் நகைகளை வாங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் நகைகளின் ஏற்ற, இறக்க விலை சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நகை வாங்க செல்வதற்கு முன்னதாக அன்றைய விற்பனை நிலவரத்தை தெரிந்து கொள்வது அவசியமாகும். அந்த வகையில் இன்று துவங்கியுள்ள தங்கநகை விற்பனைகளை பொருத்தளவு, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.
HAL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
அதாவது நேற்றைய தங்க விற்பனையில் சவரனுக்கு ரூ.24 என விலை உயர்ந்திருந்த நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 என குறைந்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சவரன் நகை ரூ.35,608 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,451க்கு விற்பனையாகிறது. இதனிடையே சென்னையில் வெள்ளியின் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.80 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.