தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தில் மேலும் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல்!

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டாலும் சில இடங்களில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் தத்தளித்தன. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிற்பகலுக்கு மேல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோல், மதுரை, புறநகர் பகுதிகளான வாடிப்பட்டி, நாகமலைப் புதுக்கோட்டை, அச்சம்பத்து, விராட்டிபத்து உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் கோரிப்பாளையம், முனிச்சாலை, தல்லாகுளம், அண்ணா நகர் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – TDS தொடர்பான புதிய விதிகள்!

இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ராசக்காபாளையம், ஆனைமலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. கோடை மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 14 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்க தார்ப்பாய்கள் கேட்டபோது அதிகாரிகள் தர மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!