10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல்!
கர்நாடகாவில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வின் முடிவுகள் மே 2-வது வாரத்தில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்கத் தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது. அதன் படி கர்நாடகாவில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இதன் முடிவுகள் மே மாதம் 2-வது வாரத்தில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார். தேர்வு குறித்து பேசிய இவர் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் தேர்வின்போது முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு ஒரு மாணவருக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை 98% பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அடுத்த கட்ட ஜூன் மாதம் 4 வது வாரத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.