தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேட்டராய சுவாமி கோவிலில் தேர் திருவிழா நாளை நடைபெற இருப்பதால் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி போன்ற தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பேட்டராய சாமி கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் ஓரளவுக்கு தொற்று குறைந்த காரணத்தினால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பேட்டராய சாமி கோவிலில் தேர்த்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – TDS தொடர்பான புதிய விதிகள்!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு தான் பேட்டராய சாமி கோவிலில் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தக் கோவிலின் கொடியேற்றம் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்றது. கொடிக் கம்பத்திற்கு மஞ்சள் கொம்பு துணியில் சுற்றி பேட்டராய சுவாமி முன்பு வைத்து பல வேதங்கள் ஓதி கம்பத்தில் கட்டி கோவிலை சுற்றி எடுத்து வந்து கம்பம் வைக்கப்பட்டது. இந்த கொடியேற்றத்திற்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
மேலும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வான தேர்த்திருவிழா நாளை நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேட்டராய சாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற இருப்பதால் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி போன்ற தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளார்.