PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – TDS தொடர்பான புதிய விதிகள்!
மாத ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் PF திட்டத்தை பயன்படுத்தி அதிக வருமானம் பெறுபவர்கள் அதை வருங்கால வைப்பு நிதியில் ஒதுக்கி வைத்து அதிக லாபம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஈட்டிய வட்டிக்கு பொருந்தும் வரி விதிகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
புதிய விதிகள்:
தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல், வருங்கால வைப்பு (Provident Fund) நிதியில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்வதற்கான வட்டி வரி விதிக்கப்படும். அதிக பங்களிப்பு செய்வதன் மூலம் அதிக வட்டி சம்பாதிக்க EPF கணக்குதாரர்கள் அதன் எல்லைக்குள் வருவார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த மாற்றத்தை நிதியமைச்சர் அறிவித்தார், இந்த மாற்றம் ஒரு மாதத்தில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிப்பவர்களை பாதிக்காது. ஒரு நபர் தனது EPF கணக்கில் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்தியிருந்தால், இறப்பு ஏற்பட்டாலும் கிடைக்கும் வட்டிக்கு அவர்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் தொடரும் கோடை மழை – அதிகரிக்கும் வெப்பச்சலனம்!
சம்பாதித்த வட்டியில் பங்களிப்பாளர்களுக்கு 10 சதவீதம் வரி கழிக்கப்பட்ட மூலத்தில் (டிடிஎஸ்) விதிக்கப்படும். மேலும், நபர் பான் கார்டை EPF கணக்கில் இணைக்கவில்லை என்றால், அவர்கள் 20 சதவீத டிடிஎஸ்-ஐ இரட்டிப்பாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏப்ரல் 1, 2021 க்குப் பிறகு பங்களிப்புகளைச் செய்தால் மட்டுமே இது செல்லுபடியாகும். மேலும் புதிய விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக நீடித்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வட்டிக் குறைப்பு முடிவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துள்ளது.
WIPRO நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி & விண்ணப்ப விவரங்கள் இதோ!
இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதே நிலைக்கு தற்போதைய வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 2022 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலக்கு வரம்பை ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக வைத்திருந்தார். அறிக்கையின்படி, அந்த ஆண்டில் ஒருவர் இறந்துவிட்டாலும் TDS வசூலிக்கப்படும். செலுத்தப்படும் அல்லது செலுத்த வேண்டிய பங்களிப்புகள் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி விஷயத்தில், வரி இல்லாத பங்களிப்பின் வரம்பு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ஆகும்.