தமிழகத்தின் 3 மாவட்டங்களில் தொடரும் கோடை மழை – அதிகரிக்கும் வெப்பச்சலனம்!

0
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் தொடரும் கோடை மழை - அதிகரிக்கும் வெப்பச்சலனம்!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் தொடரும் கோடை மழை - அதிகரிக்கும் வெப்பச்சலனம்!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் தொடரும் கோடை மழை – அதிகரிக்கும் வெப்பச்சலனம்!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்து கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கோடை மழை

தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும். ஆனால் தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் இவ்வாறு மழை பெய்வது கடந்த 4 அல்லது 5 ஆண்டு காலத்திற்கு பிறகு நிகழ்கிறது என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது.

WIPRO நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி & விண்ணப்ப விவரங்கள் இதோ!

இதில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கோடை மழை பெய்துள்ளது. இதில் குறிப்பாக சமாதானபுரம், நீதிமன்றம், பாளை மார்க்கெட், கே.டி.சி.நகர், ஐகிரவுண்டு, மகாராஜநகர், டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 1 மணி நேரம் பலத்த கனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இங்கு கடம்பூர், கழுகுமலை, மணியாச்சி, தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சூரங்குடி, கோவில்பட்டி, வைப்பார், காயல்பட்டினம், விளாத்திகுளம், வேடநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

அதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதே போல் தென்காசி மாவட்டத்திலும் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!