தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

தமிழகத்தில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களின் பிறந்தநாள் விழாக்களையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கட்கிழமை செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தாக்கம் குறைந்து நிலைமை சீராகி வருவதால் அமலில் இருந்த அனைத்து நோய் கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கு என தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வருடம்தோறும் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே சமூக சிந்தனைகளை வளா்த்தெடுக்கும் வகையிலும், தமிழ் ஆா்வத்தை ஊக்குவிக்கவும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 2972 காலிப்பணியிடங்கள்!

மேலும் நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களான அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் சரியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் இந்த போட்டிகள் நடைபெறவில்லை.ஆனால் தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்து உள்ளதால் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இந்த ஆண்டு போட்டிகள் நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஃபார்முலாவின் படி DA தொகை – கணக்கீடு விவரங்கள் இதோ!

எனவே தருமபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி அரசு கலைக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு வரும் ஏப்.19 முற்பகல் 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவித்துள்ளார். இந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3ம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதையடுத்து அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ. 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!